Monday, December 16, 2013

நானும் டுவிட்டரும்!!


நான் ஏன் டுவிட்ட வந்தேன் ஒரு சிறு அறிமுகம் ..

எனக்கு மூஞ்சி புக்கே அனுபவம் இல்லமாதான் இருந்தது ..ஆனா  எல்லோரும் முஞ்சி புக்கை பேசி பேசி ..எனக்கும் அதுல போகணுமுன்னு ஆர்வம் ..ஒருநாளு account open பன்னி சேர்ந்தேன் ..எனக்கு அதுல அவ்வளவு interest இருந்தது இல்ல ..அப்ப , அப்ப போயி பார்த்துட்டு வரத்தோட சரி...

திடிருன்னு ஒரு நாலு சும்மா அதுக்கு அழகான photos அன்னுபலாமுனு முடிவு பண்ணி வெறி  பிடிச்ச மாதிரி photos அனுபிகிட்டே இருந்தேன் ..ஒரு நாலு என்னோட ஜூனியர் பையன் என்கிட்ட...அண்ணே ஒரே ரோதனைய போச்சி ..எப்ப open பண்ணுனாலும் உங்க id லேருந்து பத்து பதினைந்து photos னு முஞ்சிய சுருக்கிட்டு சொன்னான் ..அப்படியே ஜெர்க் ஆயிட்டேன் ! மத்தவங்களா இருந்தா மரியாதை இல்லாம திட்டி இருப்பான் போல நினசிகிட்டு!! ..ஒன்னும் வெளிக்காடிகாமல்  மனசுக்குள்ளயே முழுங்கி கிட்டேன்.

ஏன் எனக்கு அவ்வளவா பிடிக்லைன்னு தெரியல ...ஆனா ! எப்ப பார்த்தாலும் ..நீ உண்மையில் சிறந்த குடிமகனா Like போடாமல் போகாதே ..இல்லாட்டி இந்த வறுமையை பாருங்கள் உள்ளம் துடிக்குதே Like or comment ..

இந்த குழபங்கலுக்கு இடையே ...ஏதாவது news படிக்கும்பொழுது  ..Twitter -ல மோடி அத சொன்னார் ..ஒபமா இதை சொன்னார் ..பின்பு நம்முடைய ஆனந்த விகடன் வலை பாயுதே வரும் ஜோக்ஸ் ..Twitter அப்படினா என்னா ..என்கின்ற பிம்மத்தை ஏற்படுத்தி விட்டது ..ஒரு நாளு account open பண்ணி  ..உள்ள நுழ்ஞ்சாச்சி ...
உள்ள போனா யாருமே இல்ல ..நான் மட்டும் தனியா இருக்கேன் ..அப்ப எனக்கு தெரிஞ்சது politician அல்லது சினிமா actors , directors அவங்க account ல படிச்சிட்டு வந்து வெளில சினிமா கதை பேசுறது ..

அப்புறம் ட்விட்டர் பிரபளங்கனு ஒரு குரூப் இருக்கு ..அவங்க அக்கௌன்ட் போயிட்டு படிக்கிறது ..இல்லாட்டி ..வானத்துல நிலா ..பூமில கடலுனு எழுதிட்டு ஓடிடவேண்டியது ..அப்படி வெளங்கா வெட்டியா ட்விட்டர் இருக்ககுளதான் ( இப்பவும் அப்படிதான் )..  எப்ப டுவிட்டர் வந்தாலும் என்னோட TL-ல நான் follow பண்ற நாலு பேரோட மென்சன் வந்திருக்கும் அத வெறிக்க பாக்குறது ..அப்பலாம் hollywood படத்துல வரமாதிரி....ஏதோ மீன்
market -ல தமிழ் பேசுரவங்கலோட எண்ணற்ற  குரல் ... Back Ground -ல கேக்குற மாதிரியே இருக்கும் ..எதோ ஒரு உலகம் உள்ள இருக்குனு தெரிஞ்சிது ..
Reply .பண்ண அப்பத்தான் ஆரம்பிச்சேன் ..இப்பதான் TL , மென்சன் ,RT ,டீஎம் தெரிஞ்சிகிட்டேன் ..

தெரியாத friends பேசுவாங்க ..நாமலும் பேசுவோம் ..அவங்க அவங்க மனசுல உள்ள கவிதை , அரசியல் , சினிமா ,சண்டை ,etc ...எல்லாம் இருக்கும் ..நம்ப RT பண்ணுவோம் ..நமது பிடிச்சிருந்தா அவங்க RT பண்ணுவாங்க !

எனக்கு புரிஞ்ச வரைக்கும் இந்த Twitter நல்ல சமுக வலைத்தளம்  தான் !!..நல்லா use பண்ணிக்கலாம்!!! , ஆனா யாரும் அத பண்றது இல்ல ..நடிகர் , நடிகை சண்டை  ( நானும்தான் ), 90% வெட்டி பேச்சுகள் ..யாரு அறிவாளினு காட்டிகறத்துகாக மாஞ்சி , மாஞ்சி பேசிபாங்க!  இதுல இந்த பிரபலங்கள் List புதியவங்களுக்கு Reply பண்னகுட யோசிக்கும் ..கொடுமை !!

என் வலை தளத்தை open செய்து ..இங்க பாறா !! தொற என்னமோ சொல்ல வருதுனு ..படிப்பவர்கள் , குறிப்பாக இந்த Twitter பயன்படுத்துபவர்கள் .இதில் நிறைய நண்பர்களை followers வைத்திருப்பவர்கள் ...நாம் அனைவரும் ஒன்று செய்ய முனையலாம் ..

முழு பொழுதை வெட்டியாக  பேசாமல் விண்வெளி , பகத்தறிவு , தமிழ் நாட்டில் அரசியல் வாதிகள் செய்ய வேண்டியது , விட்டிலியே அடைப்பட்டிருக்கும் குடும்ப பெண்கள் எவ்வாறு சமுக வலை தளங்களை பயன்படுத்துவது ..இப்படி சிலவற்றை எடுத்து விவாதங்கள் செய்யலாம் ஓவ்வோன்றும் முடிவில்லா கருத்துகளை கொண்டது ..நான் இப்படி மதங்களை பற்றிய ஆங்கில விவாதங்களை படித்திருகின்றேன் ..

நிச்சயமாக நாம் இதை தொடங்கி வைத்தால் ..இன்னும் 30, 50 ஆண்டுகள் கழித்து வருங்கால இளைஞர்கள் சமுக வலைத்தளங்களை நல்ல முறையில் பயன்படுத்த வழிவகை அமைத்து தரலாம்.

Twitter - என்கின்ற கடலில் கால்களை மட்டும் நனைத்துள்ள ஒரு தத்துகுட்டியின் அனுபவத்தின் முதல் அலை !!

என்றும் நட்புடன் ...அருள் !!



No comments:

Post a Comment