Tuesday, December 31, 2013

காதலிக்க செல்வோர் இவ்வழியாக செல்லவும்...

இமை விரிந்து,
விழி  நோக்க ,
மின்னல் பரவி,
கண்கள் பேச,
அனுமதி கொடுத்து,
விரல்கள் மோத,
கைகள் இடித்து,
சேர்ந்து நடந்து,
பேசி கலைத்து,
கலைந்து சென்று,
திரும்ப பேச,
குறுஞ்செய்தி அனுப்பி,
கைபேசியில் உரையாடி,
ஊர் சுற்றி,
உணவு உண்டு,
பீச்சில் அமர்ந்து,
கூந்தல்கள் கோதி,
கை பிசைந்து,
எச்சில் விழுங்கி,
கட்டி அனைத்து,
வாசனை முகர்ந்து,
மின்சாரம் பாய,
முத்தம் தொடுத்து,
உடல் எரியும்,
வெப்பம் தணிக்க,
அச்சம் விட்டு,
அறை எடுத்து,
உடல்கள் இழைத்து,
சுவாசம் அற்று,
தவத்தில் கிடக்கும்,
காமம் சுவைக்க,
காதலின் பெயர்,
வேண்டும் என்றால்,
இக்காதல் செய்வோம்.

..................அருள்

No comments:

Post a Comment