Tuesday, December 3, 2013

மாமாவின் பிரிவு

5 வருடங்களாக எனக்கு  மாமா -வை தெரியும் பிழைப்புக்காக வெளிநாட்டில் வேலை பார்த்து கொண்டு இருந்தேன் ..நன்றாக  நினைவு இருகின்றது !தர்மபுரியில் இருந்து நண்பர் ஒருவர்  இங்கு வேலைக்கு வருவதாக  நண்பன் சொன்னான்.

நான் என் அறையில் படுத்து தூக்கம் வராமல் புரண்டு  கொண்டு இருந்தேன்.அப்போழுது என் அறையில் வாசலில் தொங்கி கொண்டிருந்த Curtain -னை ஒரு மெல்லிய உருவம் சிறிதாக நகர்த்தி நைசாக  எட்டி பார்த்தது, அப்போழுது நாங்கள் எதோ பூனை வந்துவிட்டதோ என்று நினைத்தோம் ஆனால் அதிலிருந்து ஒரு உருவம் வெளிப்பட்டு ஒவ்வொருவரையும் பார்த்து வணக்கம் வைத்து கொண்டே தன்னை அறிமுகம் படுத்தி கொண்டது .நானும் என்னை கொடுமையே என்று  அறிமுக படுத்தி கொண்டேன் ( வேறு என்ன செய்ய )!!

தான் வேலை செய்யும் அலுவலகித்திலேயே  தங்கி கொண்டு ..என்றாவது வெள்ளிகிழமை ஒருநாள் பூனை மாதிரி வந்து ..எங்கள் கட்டிலில் அவருடைய seat -டை  அதில் பட்டும் படாமலும் வைத்து அமர்வார் ,,பின்பு மெல்லிய குரலில் பேசுவார் .ஆனால் எப்பவும் மறக்காமல் என்ன CD -இருகின்றது என்று கேட்டு வாங்கி செல்வார்,

உண்மையில் அவர் தர்மபுரி இல்லை..அவர் எப்போழுதும் தமிழ் பேச ஆரம்பித்தால் தமிழர்களாகிய எங்களுக்கு அந்த தமிழ் புரிந்ததே இல்லை. தமிழ்நாட்டில் வேற்று தமிழ் பேசுகிறவர்களும் இருப்பார்கள்போல என்று நினைத்துகொன்டேன்.

பின்புதான் தெறிந்தது கிருஷ்ணதேவராயர் ஆண்ட கிருஷ்ணகிரியை சேர்ந்தவர் என்றும்.நம் தமிழ்நாட்டின் முக்கிய பகுதியிலிருந்து வந்து புதியவகை தமிழ் உரையாடி கொன்டிருக்கிறார் என்றும் புரிந்தது!

இப்போழுது நன்றாக பேசி கொன்டுயிருக்கிறாறே என்று நாம் நம்பும்போழுது அவரைகாவை சவரக்காய் என்பார், பூசனிக்காயயை பனங்காய் என்று வாய்க்கு வந்ததை சொல்லி..நாங்கள் எல்லோரும் அமைதியாக இருந்தால் எங்களையே குருகுருயேன்று பார்ப்பார்..பின்பு என்ன நினைப்பாரோ அவராகவே ஹா..ஹா..ஹா-னு சிரித்துவிட்டு.எங்கள் ஊரில் இப்படிதான் பேசுவார்கள் என்று சொல்வார். பலநாட்கள் மாரடைப்பு வரும்மளவுக்கு கேட்டு கேட்டு பழகி விட்டதால் அனைவரும் அமைதியாக சென்று விடுவோம்.

மற்றவரிடம் பழகும்போழுது இந்த பூனையும் பால் குடிக்குமா என்பதுபோல நடந்து கொள்வார் இப்படியாக அவர் நடந்து கொண்டாலும் எனக்கு எப்பவும் அவரின் மேல் ஒரு சந்தேக பார்வை இருக்கத்தான் செய்தது ..நான் நினைத்து ஒன்றும் தப்பு இல்லை என்பது போல் ..மெல்ல மெல்ல அவரின் உண்மை சுயரூபம் வெளியே வந்தது.
எப்பவும் Area  என் கையில் இருக்கவேண்டும் என்கின்ற  நினைப்பில் மிதந்து கொன்டுயிருந்த எனக்கு  ..மெல்ல பயம் பரவ ஆரம்பித்தது, தலமை பதவிக்கு ஆபத்து வந்துவிட்டதை உனர்ந்தேன் !

நாங்கள் எல்லாம் ரௌடியாக Form - ஆகிவிட்ட நிலையில் ..ஒரு பூனை தலைமை பதவியை நோக்கி மெல்ல நகர்ந்தது .முதல் முயற்சியாக அலுவலக Room -லிருந்து எங்களுடன் வந்து தங்கி கொண்டு ..ஒன்னுமே தெரியாத பாப்பா போட்டாளாம் தாப்பா !! என்பது போல ..சில விஷயங்களை கற்று கொண்டிருந்தது ( கெடுத்தது நானும்தான் )..இப்படியாக சென்று கொண்டிருந்த நாட்களின் இடையில் ..எனக்கு மாமா அவரும் ..அவருக்கு மாமா நானும்மாக மாரிவிட்டிருந்தோம் !!

உண்மையில் என் வாழ்கையில் , நான் பணிபுரிந்த நாட்டில் .ஒரு தோழமை  நான் சோர்வடையாமல் பணி புரிய உதவி கொண்டிருந்தது ..இங்கு என் சந்தோஷ தருணங்கள் அனைத்தும் மாமாவுடனே கழிந்தது ..அனைத்து தருணங்களிலும் எங்களுக்குள் நல்ல புரிதலும் இருந்தது !

திரும்பவும் நம் கதைக்கு வருவோம் ..'பாட்ஷா' படத்தில் மாணிக்கம் திடிரென்று பாட்ஷாவாக மாறுவதை போல ..இந்த வீட்டு பூனையாக நடித்துகொண்டு இருந்த மாமன் ..வேஷத்தை கலைத்து ஒரிஜினல் காட்டு பூனையாக மாறியது ( நான் அன்றே நினைத்ததுதான் )..நான்
அரசனாக ஆண்டுவந்த Area -வில் ..அனைவரையும் சொர்கத்தில் ஆழ்த்தி
தலைமை அரியணையில் அமைதிப்படை சத்தியராஜ் போல அமர்ந்துகொண்டது இந்த திருட்டு பூனை மாமா !!

எங்கள் Room -ல் கேரன் போர்ட் விளையாட்டை  சர்வதேச விளையாட்டாக மாற்றிய  மாமா ...இரவு முழுவதும் தூங்கவிடாமல் , உனக்கு தில் இருந்தா வா ? அது இருந்தா வா ? இது இருந்தா வா ? என்று கூப்பிட்டு கொண்டே இருப்பார் .

நான் மனம் திறந்து பேசகூடிய நல்ல நண்பனாக ...என் மாமாவாக மாறி என் நட்பின் உச்சத்தில் அழைக்க பட்டதே மாமா!! ..நீங்கள் எதுவும்  தவறாக நினைக்க வேண்டாம்? ..வெளிநாட்டின் சுமை தெரியாமல் ..வார வாரம் அழைத்து ..நினைவுகளை பகிர்ந்து கொண்டு ..என்னுடன் கட்டி புரண்டு படுத்திருந்து ...ஒரே போர்வைக்குள் சண்டை போட்டு , கதை பேசி ..கட்டி பிடித்து உறங்கிய நாட்கள் பாலைவனத்தின் கவிதை ! !

இப்படி ஒன்னும் ,மண்ணுமாக இருந்துவிட்டு ..அனைவரையும் சந்தோஷ பானங்களில் மிதக்கவிட்டு , சந்தோஷ பூக்களை வார்த்தைகளாய் வாரி இறைத்து ..எண்ணின் அனைத்திலும் ஒருவனாய் ..மாறிய பொழிதில் வாழ்கையின் சிறையில் அடைபட சென்றுவிட்டாயே என் மாமா !!

போகும் நாள்வரை மேகமூட்டமாய் இருந்துவிட்டு ..உங்களை விட்டு எங்கு செல்வேன் என்று சொல்லி ,சொல்லியே ..Room -ல் இருந்த உன் Things-சை எல்லாம் வாரி சூரிட்டு கொண்டு சென்று விட்டாயே ! சங்கத்தின் நிலைமைதான்  என்ன ..எங்கள் நிலைமைதான் என்ன.. உன் அன்பு மாமனின் நிலைமைதான் என்ன !!

மாமா -வின் பிரிவு என்னை கடுமையாக வாட்டினாலும் ..மாமா மகிழிச்சி பொங்க திருமணம் செய்து..மாமாவை வாழ்வாங்கு வாழ வேண்டும் என்று வாழ்த்துகின்றேன் !!...

என்றும் அன்புடன் மாமா அருள் .............


No comments:

Post a Comment